சினிமா செய்திகள்
தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி

தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி

 

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் களவாடிய பொழுதுகள் ஆகிய தரமான திரைப்படங்களை இயக்கிய தங்கர்பச்சான் தனது தங்கர் திரைக்களம் நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்குகிறார்.
 
'அம்மாவின் கைப்பேசி' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படம், தங்கர்பச்சான் இயக்கிய மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கதைக்களம், தொழில்நுட்பம், உருவாக்கும் விதம் ஆகியவற்றில் புதிய பாணியில் உருவாகி வருகிறது.
 
கதையின் நாயகனாக சாந்தனு நடிக்க, ஹசெல்வி' என்ற கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இவர்களுடன் மிக முக்கியமான அம்மா வேடத்தில், ஒரு பிரபல நடிகை நடிக்கிறார். இத்துடன், திரைக்கதையின் முக்கிய பாத்திரங்களுக்காக 75 புதிய நடிகர்-நடிகைகளை தேர்ந்தெடுத்து, முறையான நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்து இருக்கிறார்.
 
முதல் கட்ட படப்பிடிப்பு நெய்வேலி, மேட்டூர் ஆகிய இடங்களில் 25 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்தி பட இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
 
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை தங்கர்பச்சான் கவனிக்கிறார்.





தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி

First   <<  1 2 3 4 5 6 7 8 9 10 11 12  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்