சினிமா   விமர்சனம்
பொற்கொடி பத்தாம் வகுப்பு

பொற்கொடி பத்தாம் வகுப்பு

குடியால் அழியும் கிராமத்து கதை தான் பொற்கொடி பத்தாம் வகுப்பு.

சாராய வியாபாரியான பாலாசிங்கின் மகன் ப்ரவீன் தன் சக மாணவி பொற்கொடியை விரும்புகிறான். சாராயத்தால் சீரழியும் கிராமத்தை காப்பாற்ற ப்ரவீன் தன் தந்தையை போலீசில் மாட்டிவிட, தப்பி ஒடும் பாலாசிங்கை பொற்கொடியும், அவளது அம்மாவும் காட்டி கொடுத்து விடுகிறார்கள். ஜெயிலுக்கு செல்லும் பாலாசிங்  திரும்பி வந்து பழி தீர்க்க முற்படுகிறார். பாலாசிங்கிடமிருந்து பொற்கொடியை மீட்டாரா? காதல் கைகூடியதா? என்பதே சோகமான க்ளைமேக்ஸ்.

ப்ரவீன், பிருந்தா, பாலாசிங், ராஜஸ்ரீ,சல்கான் ஆகியோர் கிராமத்து கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒவியன் இசையிலும் ஸ்ரீமுருகன் ஒளிப்பதிவு சுமார்ரகம்.
 
இயக்கம்-பழ.சுரேஷ்.சிறப்பான வஷத்தை மிகவும் அழகாக சொல்ல நினைத்து அதை விட்டு விட்டு கதைக்ளகளம் மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதித்துவிட்டு க்ளைமேக்ஸை டிராஜிடியில் முடித்து அனுதாபம் பெறும் முயற்சியில் தோல்வி தான் ஏற்படுகிறது.கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஜெயித்திருக்கலாம்.
 
அரியர்ஸ் பாஸாக டுடோரியலில் படிக்க வேண்டும் பொற்கொடி பத்தாம் வகுப்பு.          
      
-பேசும் சினிமா விமர்சனக் குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்