

பொது அறிவு
WHO - உலக சுகாதார மையம் - அறிவிக்கும் உலக கல்லீரல் அழற்சி தினம் - ஜூலை 28
உலகளாவிய விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கல்லீரல் ஆய்வு இந்திய தேசிய சங்கம் (INASL) மிகவும் அர்ப்பணிக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஹெபடைடிஸ் பி என்ற கொடிய வைரஸ் எதிர்த்து வடக்கு கிழக்கு இந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கியது.ஹெபடைடிஸ் பி என்று தீவிரமாக இருக்கும் கொடிய வைரஸ் நோய் பற்றிய தகவல்களை பரப்பி சாதகமாக போராட கல்வியாளர்கள் கூடுதல் கவனம் எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உலக கல்லீரல் அழற்சி கூட்டணி மற்றும் நோயாளி குழுக்கள் 'இது கல்லீரல் அழற்சி நாள்;" என்று 12 யுளமள அதாவது 12 கேள்விகளை; எழுத்து மூலம் பதிலளிக்க கேட்டு ஹெபடைடிஸ் பி மற்றும் சி நாட்டில் தடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது நோயாளி குழுக்களுக்கு பயனுள்ள, கட்டமைக்கப்பட்ட செல்வாக்கு மிக்க கருவியாக உள்ளது. WHO (World Health Organisation) மற்றும் 193 நாடுகளின் ஒப்புதலுடன் முதல் முதலாக 2011ஆம் ஆண்டிலிருந்து ஜூலை 28ந் தேதி உலக கல்லீரல் அழற்சி தினம் என்று அதிகாரப்பூர்வ உலக நோய் விழிப்புணர்வு நாளாக கருதப்படுகிறது.
இந்தியாவில் 2.5 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளை ஒப்பிடும் போது 4 மில்லியன் நோயாளிகள் க்ரோனிகல் வியாதியால் அதிகம் அவதிப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் எச் ஐ வி வைரஸை விட 100 மடங்கு அதிக தொற்று என்பது திடுக்கிட வைக்கும் உண்மை. எனவே இந்த குழுவின் முக்கிய நோக்கம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கொடிய க்ரோனிகல் வைரஸ் பற்றிய உண்மைகளை முன்னிலைப்படுத்தவும் ஆதரவை பெற உள்ளது.
இந்த பிராச்சாரத்தில் ஈடுபடும் நிபுணர்கள் ஹெபடைடிஸ் பி-யினால் ஏற்படும் காரணங்கள், விளைவுகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 'இது கல்லீரல் அழற்சி" என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நாட்டிலிருந்து இந்நோயை முழுவதுமாக ஒழிக்க பொறுப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.2010ல்லிருந்து இந்த உலக கல்லீரல் அழற்சி நாளாக பிராச்சாரத்தை தொடங்கி ஹெபடைடிஸ் பி மிக நெருக்கமாக நோய்கள் பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்பினால் தான் ஏற்படுகிறது என்பதை மக்களுக்கு வலியுறுத்துகிறது.
உலகத்தில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோயினால் 500 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் நோயாளிகள் இறப்புக்குள்ளாகிறார்கள். இதனால் INASL - ஹெபடைடிஸ் பி பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து உணர்ந்து கொள்ளும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் ஹெபடைடிஸ் பி என்ற வைரஸை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டுவருகிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையொட்டி வி.சேஷையா மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் டாக்டர் ஏ.டி.மோகன் கூறியதாவது:- இந்த வைரஸ் எச்ஐவியை விட 100 மடங்கு தொற்றும் தன்மை கொண்டது. INASL தன்னுடைய இலக்கான குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இலட்சியத்தை நிச்சயமாக எட்டிப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பிரச்சாரம், சாலையோரம் பிரச்சாரப் படங்கள், பரிசோதனை முகாம்கள் மற்றும் பத்திரிகை துறையின் உதவியோடு தீவிரமாக விழிப்புணர்வு பிராச்சாரத்தை இது கல்லீரல் அழற்சி என்ற தலைப்பில் நாடு முழுவதும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.
ஹெபடைட்டிஸ் ஏ போன்ற நுண்ணுயிரியே ஹெபடைட்டிஸ் பி ஆகும்.ரத்தப் பொருட்கள் வழியாக ஹெபெடைட்டிஸ் பி பரவுகிறது. சுத்தம் செய்யப்படாத ஊசிகள், சோதிக்கப்படாத ரத்தம், தாயிடமிருந்து குழந்தைக்கு, பாதுகாப்பற்ற உடலுறவு, ஆனால் தண்ணீர் அல்லது உணவின் வழியாக இது பரவுவதில்லை. சிர்ரோசிஸின் தீவிர பாதிப்பு ஈரல் புற்றுநோய் ஆகும். இந்தியா உட்பட, உலகுகளில் ஈரல் புற்றுநோயின் பொதுவான காரணியாக ஹெபடைட்டிஸ் பி தொற்று திகழ்கிறது. ஹெபடைட்டிஸ் பி தொடர்பான ஈரல் புற்றுநோயின் தனித்துவமிக்க குணாதிசியம் சிர்ரோசிஸ் எற்படுவதற்கு முன்பாகவே நேரடியாக புற்று நோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதே. புற்றுநோய் ஏற்றபட்டவுடன், நோயாளியின் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்புத்திறன் மோசமடையும் மற்றும் அவர்களது தொற்று வேகம் அதிகரிக்கும். பசியின்மை மற்றும் எடையிழப்பு ஆகியவைகளால் அவர்கள் பாதிக்கபடுவர். புற்றுநோயானது ஈரலுக்குள்ளும் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி இறுதியான இறப்பு சம்பவிக்கும். புற்றுநோயின் துவக்கநிலையில் எத்தகைய அறிகுறிகளும் காணப்படாது. எனினும், முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டால், இப்புற்றுநோயை, ஈரல் மாற்று உட்பட பல்வேறு வழிமுறைகளினால் குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
தடுப்பு,பரிசோதனை,பாதுகாப்பு, சிகிச்சை என்ற கோட்பாட்டின் மூலம் இந்த பிராச்சாரத்தை தொடங்கியிருக்கிறது. இந்த 2011 ஆம் ஆண்டு WHO 12 கேள்விகள் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அந்த 12 கேள்விகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. தற்போது உலக கல்லீரல் அழற்சி தினத்தில் நோய் விழிப்புணர்வு அதிகரித்து அதை தடுக்கும் முறைகளை ஊக்குவித்து பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவது.
2. ஒரு தனிப்பட்ட நபரை தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்படவேண்டும்.
3. கொள்கைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிற கருவிகளை பயன்படுத்தி பரிசோதனை, பரிந்துரை மற்றும் சிகிச்சையால் ஒருங்கிணைந்த அணுகுமுறை வளர்ச்சி.
4. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய் தொற்று நோய் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொறுப்பேற்பு.
5. நேரம்-பிணைப்பு இலக்குகளை சேர்த்துக்கொள்வதால், கல்லீரல் தொடர்பான இறப்பு விகிதத்தை குறைக்க பொறுப்பேற்பு.
6. கண்காணிப்பு அதிகரிப்பு மற்றும் தேசிய புள்ளி விவரங்களை வெளியிட பொறுப்பேற்பு.
7. கொள்கை வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தும் நோயாளி குழுக்கள் வேலை பொறுப்பேற்பு.
8. வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் சர்வதேச அளவில் சிறந்த பயிற்சி நிலைகளில் ஆய்வு திட்டங்களில் பொறுப்பேற்பு.
9. மலிவு மற்றும் ரகசிய சோதனை செய்தல்.
10. பிறப்பு மாத்திரை வழங்குதல், ஹெபடைடிஸ் பி தடுப்பூசி உள்ளிட்ட தேசிய நோய்த்தடுப்பு திட்டம் உள்ளடக்கம்.
11. புதுவிதமான மற்றும் பாதுகாப்பான ஊசி நடைமுறைகள் மற்றும் இரத்தம் மற்றும் இரத்த பொருட்கள் பாதுகாப்பு வலுப்படுத்தும் செயல்படுத்த பாதுகாப்பான சுகாதார பொறுப்பேற்பு.
12. , பாதுகாக்க கண்டறிய மற்றும் புலம் பெயர்ந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடத்தில் சிகிச்சை முயற்சிகள் வலுப்படுத்துதல்
என்பதே இந்த பிராச்சாரத்தின் முக்கிய குறிக்கோளாக சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்கூறப்பட்ட அனைத்து காரணங்களின் அடிப்படையில், ஹெபெடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்காக அவ்வப்பொழுது சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. நிஜத்தில், தடுப்பு மருந்துகளின் வழியாக , ஹெபடைட்டிஸ் பி தொற்று தவிர்க்கப்படலாம். இது தொற்றினை தவிர்ப்பது மட்டுமின்றி, சிர்ரோசிஸ் மற்றும் ஈரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. ஹெபடைட்டிஸ் பி தொற்றுக்கு ஏதிராக, உலக சுகாதார மையம் யூனிவர்சல் வேக்சினேஷனை பரிந்துரைக்கிறது. இந்த முதல் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு, ஒரு மாதம் கழித்து 2வது தடுப்பூசியும், 6 மாதத்திற்கு பிறகு ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.
இறுதியாக, இது கல்லீரல் அழற்சி-உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும்,கண்டறியுங்கள், எதிர்கொள்ளுங்கள், ஹெபடைடிஸ் எங்கேயும், எல்லோரையும் பாதிக்கும், பரிசோதியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், நோய் வரும் முன்னர் காத்தல் சிறந்தது என்ற கோட்பாடுகளுடன் ரோட்டரி கிளப் உதவியுடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டி-சர்ட், கேப் ஆகியவைகளை விநியோகித்து நடை பயணம் மூலம் இந்த பிராச்சாரத்தை மேற்கொண்டுள்ளது என்றார்.
மேலும் தகவல்களை பெற www.worldhepatitisalliance.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மற்றும் 1800 3000 1024 என்ற எண்ணில் n;தாடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.
விழாவில் ரோட்டரி கிளப்பின் மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர்.ஸ்ரீராம் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை திரு.ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
- சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
- Master K.L.Dheeraj Successful Record acheivement On India Book of Records
- உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
- யோக முத்திரைகள்
- சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி உலக அழகியாக தேர்வு
- குடியரசு தலைவர்கள் சில நினைவலைகள்
- உலகின் மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை
- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை கிïரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது- பூமிக்கு படங்களை அனுப்பியது
- சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
- கண்ணுக்கு தெரியாத புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- மைசூர் அரண்மனையின் வயது 100
- தொடரும் பி.எஸ்.எல்.வி. வெற்றி பயணம்
- உலகின் பணக்கார நாடு கத்தார்
- இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை
- மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிக்கு டாக்டர் சரவணனின் அரிய அறுவை சிகிச்சை
- பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு பெண் குழந்தை
- கடாபியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்
- கொல்லப்பட்டார் கடாஃபி
- 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக இருந்த கடாபியின் பரிதாபமான கடைசி நிமிடங்கள்
- மியாட் மருத்துவமனையின் அரிய உலக சாதனை
- 70 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் பொக்கிஷம்
- 89 நாட்டை சேர்ந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக
- திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உதயமாகும் நிகழ்வு
- அமெரிக்காவில் தமிழ்த்தாய் சிலை
- 66வது நினைவு தினம்
- மியாட் ஆஸ்பத்திரியின் செயற்கரியசேவை - உலக ஹெபடைட்டிஸ் பி தினம் 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி - நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார்
- WHO - உலக சுகாதார மையம் - அறிவிக்கும் உலக கல்லீரல் அழற்சி தினம் - ஜூலை 28
- மியாட் ஆஸ்பத்திரி யின் செயற்கரிய சேவை உலக ஹெபடைட்டிஸ் பி தினம்- ஜூலை 31ந் தேதி 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி
- பிரபல பாப் பாடகி மரணம்
- சென்னை சாலைகளில் பவனி வந்த பழைய மாடல் கார்கள் - வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

















































