பொது அறிவு
இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை

இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை

 

தோற்றத்தை மாற்றாத சிகிச்சை
 
மருத்துவ மனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை 
 
 
      சிட்டி ஹாஸ்பிட்டல் - சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணா கண் காது - மூக்கு தொண்டை மருத்துவமனை ஐந்தாவது அறுவை சிகிச்சை முகாமை நேரலையாக நடத்த தயாராகி வருகிறது. ‘எண்டோ ஓ.ஆர்.எல்-2012” (“நுNனுழு ழுசுடு – 2012”) என்ற இந்த முகாம் பொது மக்களின் வேண்டுகோளின் பேரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் 300 காது - மூக்கு – தொண்டை மருத்துவர்களுக்கு அடிப்படை முதல் மேல் மட்ட நுணுக்கமான அறுவை சிகிச்சை வரை செய்ய பிப்ரவரி 3.4.5ம் தேதி வரை பயிற்சி அளிக்க இருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த மருத்துவர்கள் காது. மூக்கு. சைனஸ். தொண்டை. கண் மற்றும் மூளை சம்பந்தமான நோய்களை குணப்படுத்த பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். 
      தலைமை பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் பு.சுந்தர கிருஷ்ணன் எண்டோஸ்கோப்பி மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்வதில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்தவர். இந்தியர்களின் நோய் மற்றும் வாழ்க்கை முறை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் ஐந்தாவது முறையாக இந்த எண்டோஸ்கோப்பி பயிற்சி முகாமை நடத்த இந்திய மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம். தலை மற்றும் கழுத்து சம்பந்தமான சிக்கலான பிரச்சனைகள்இ ஆப்தல்மாலஜஇ நியூரோ-சர்ஜரஇ  ரேடியோலஜிஇ தொற்று நோய்கள் போன்ற மற்ற துறைகளுடன் தொடர்பு உடையதாகையால் சம்பந்தப்பட்ட பல பிரபல மருத்துவர்கள் தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள். டாக்டர் ஜி.சுந்தர கிருஷ்ணன்இ டாக்டர் துளசி தாஸ்இ டாக்டர் முத்துகுமார் மற்றும் மும்பையை சேர்ந்த டாக்டர் நூப+ர் நெருகார் கபர். 
 
      தலை மற்றும் கழுத்து சம்பந்தமான பிரச்சனைகளை எளிதாக தீர்;;க்கும் அளவிற்கு நாஸல் எண்டோஸ்கோப்பி புரட்சிகரமான முன்னேற்றத்தை எட்டி இருக்கிறது. இந்த நாஸல்-எண்டோஸ்கோப்பி சிகிச்சை முறையில் உடலின் வெளிப்புறத்தில் கத்தியால் அறுத்து சிகிச்சை செய்யாமல் இயற்க்கையாக உள்ள மூக்கு தொண்டை காது வழியாக எண்டோஸ்கோப்பி முறையில் சிகிச்சை செய்யப் படுவதால் வெளிப்புற தழும்புகளோ. மண்டை ஓட்டை துளைக்க வேண்டிய அவசியமோ ஏற்படுவதில்லை. 
 
      அழகு பாதிக்கப்படாமல் இருப்பது இந்த சிகிச்சை முறையின் தனி சிறப்பு பாதிக்கப்பட்ட பகுதியை பன் மடங்கு பெரியதாக்கி பார்க்கும் வசதி உள்ளதால் முக்கிய உறுப்புகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்பதுடன் நோயும் திறம்பட தீர்க்கப்படுகிறது. அவசர நிலை ஏதுவும் ஏற்படுவதில்லை. அறிதான சில கேஸ்களின் நோயின் அறிகுறி திரும்ப தென்பட்டாலும் முதல் முறை செய்யப்பட்ட அதே வழியாக திரும்ப அறுவை சிகிச்சை செய்வதால் புதிதாக தழும்புகளோ. மாற்றமோ ஏற்படாது. மிக குறைவான அறுவை செய்யப்படுவதால் மருத்துவமனையில் ஒரு நாள் பகலோ அல்லது இரவோ இருந்தால் மட்டுமே போதுமானது. 
 
      இந்த பயிற்சி முகாமின் நோக்கம் இந்த எண்டோஸ்கோப்பி போர்டபிள் இயந்திரத்தை திறமையாக கையாள பயிற்சி அளிப்பது மற்றும் மருத்துவர்களை இந்த சிகிச்சை முறையை பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தூண்டுவதுதான் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் இந்த மருத்துவ கல்வி முறையை பயிற்றுவிப்பவர்களுக்கு 25 புள்ளிகள் அளிக்கிறது. இந்த பயிற்சி முகாமில் ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். 
 
      தமிழ்நாட்டின் ஆளுநர் மதிப்பிற்க்குரிய டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் சனிக்கிழமை பிப்ரவரி 4ம் நாள் 2012 அன்று ஸ்ரீஹாலஇ; 47இ பர்கிட் ரோடு. 4வது தி.நகர் என்ற விலாசத்தில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்களை கௌரவிப்பார்கள். 
 
      டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில் வாஹனன் நடராஜன் விழாவிற்கு தலைமை தாங்குவார். 
 
      மெட்ராஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ருஐழுசுடு-ன் நிர்வாகி பேராசிரியர் டாக்டர் ஏ.முரளிதரன் முக்கிய உரையாற்றுவார். 





இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை

First   <<  1 2  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்