

நேர்கானல்
நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் - நடிகை தமன்னா ருசிகர தகவல்
தமன்னா கதாநாயகியாக நடிக்கும் ஒரு புதிய படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. தமிழ் படத்துக்கு, ஏனென்றால் காதல் என்பேன் என்றும், தெலுங்கு படத்துக்கு, எந்து கண்டி பிரேமனவா என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
தேவகோட்டையை சேர்ந்த கருணாகரன் இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இது, இவர் டைரக்டு செய்துள்ள 8-வது படம். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
படத்தின் கதாநாயகன் ராம் பேசியதாவது: ஐதராபாத்தில் பிறந்தாலும், படித்தது, வளர்ந்தது சென்னையில்தான். 8 வருடங்களுக்கு முன்பு 'அடையாளம்' என்ற தமிழ் குறும்படத்தில் நடித்து வாய்ப்பு தேடினேன்.
'காதல்', 'டிஷ்யூம்' பட வாய்ப்புகள் வந்து கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது. பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறாமல் இருந்தது.
இப்போது இந்தப் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த கருணாகரன் இயக்கத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
காதல், காமெடி ஆக்ஷன் கலந்த கமர்சியல் படம். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நடிகை தமன்னா கலந்துகொண்டு தமிழில் பேசி அசத்தினார். அவர் பேசியதாவது:-
''நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்பைத்தான் குறிப்பிடுகிறேன்.
'பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னை தழுவுகிறது.
நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, ''செல்லம்'' என்றுதான் அழைப்பார். அந்த ''செல்லம்'' என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.
இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்.''
இவ்வாறு தமன்னா பேசினார்.
டைரக்டர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.
- என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் - அவர்களின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் : ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
- நான் எந்த நடிகரையும் போட்டியாக கருதவில்லை - சிவகார்த்திகேயன்
- ரியல் ஸ்டார் அஜீத்
- எனக்கு இசையில் தான் ஆர்வம் நடிப்பில் இல்லை - டி.இமான்
- ஹன்சிகா - ஒரு மினி பேட்டி
- பாலாவின் நன்றிக்கடன்
- அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்து யானை
- ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கும் ரமேஷ் விநாயகம்
- 121212 பிறந்த நாள் பரிசு!
- புதுச்சேரியில் உருவான ஹாலிவுட் படம் லைப் ஆப் பை
- ஜி.வி.எம். கேரக்டருக்காக எந்த ஆர்டிஸ்ட்டையும் ப்ரஷர் பண்ண மாட்டார் - சமந்தா பேட்டி
- நடிப்பு வெரைட்டியில் ஒரு கலர்ஃபூல் காக்டெய்ல் - ஹீரோ சீயான் விக்ரம்
- மாற்றான் ஒரிஜினல் படம் தான் - சூர்யாவின் அதிரடி பேட்டி
- சினிமாவின் அரிய கலைப்பொக்கிஷ பெட்டகம் ஜி.தனஞ்செயன்
- புத்தகம் படத்தில் கலக்கலான ராக் பாடல்! ஒரே பாடலில் 186 நாட்டு நாணயங்கள்
- காதுகளை, கண்களாக பயன்படுத்தும் பார்வையற்ற மனிதர் தாண்டவம் படத்தில் நடித்தார்
- பாகன் படத்தின் மூலம் அறிமுகமாகிய பெண் பாடலாசிரியர் முருகவேணி
- ஒரு நல்லகுணச்சித்திர நடிகராக பெயரெடுக்கிறதுதான் என் லட்சியம் - டாக்டர். சூரி
- சந்திரா படத்துக்காக ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
- சதம் அடித்து மதன் கார்கி சாதனை
- போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்தேன்
- சிலம்பரசன்-நயன்தாரா மீண்டும் ஜோடி சேருகிறார்கள்
- அமெரிக்கா தந்த அடையாளமும் நரேந்திர மோடி தந்த நற்சான்றிதழும் - நடன இயக்குநர் ஜி.வி.நந்தா
- நான் ராஜாவாகப் போகிறேன் -டைரக்டர் பிரத்வி ராஜ்குமார் பேட்டி
- ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் - அசின்
- கலைஆர்வம் வந்தது எப்படி? இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
- வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன்
- ரித்திகா ஸ்ரீனிவாஸ் - வழக்கு எண் 18/9
- நான் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால், எப்படி நான் மற்ற மொழிகளுக்குள் சென்றிருக்க முடியும்? - சந்தோஷ் சிவன்
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு கோயில்! புரட்சி தலைவி ஜெயலலிதா ஒரு தீபம்!!





















































